அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே மருந்து கையிருப்பு உள்ளது; தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு: ஊசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் மக்கள்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள், மினி கிளினிக்உட்பட 5 ஆயிரம் மையங்களில் கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் தடுப்பூசி போடப்படுகின்றன. தொடக்கத்தில் தயக்கம் காட்டிய பலரும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உட்படதடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். அதேநேரம், பல மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QdNAZr
via
No comments