Breaking News

சென்னையில் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: 25 மாவட்டங்களில் ரூ.100ஐ எட்டியது

சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறி வருவதால், ரூ.100ஐ நெருங்கி உள்ளது. இதற்கிடையே, 25 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2T9Euyu
via

No comments