Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 அங்கன்வாடி மையங்களுக்கு சிறப்பு தகுதிச் சான்று: தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் வழங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 அங்கன்வாடி மையங்கள் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செயல்பட்டதால் தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மூலம் இந்த அங்கன்வாடி மையங்களுக்கு ஈட் ரைட் கேம்பஸ் தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள், உணவுவணிகர்கள், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xWMjX8
via

No comments