Breaking News

டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை- 55 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின: கடலூர், விழுப்புரத்திலும் பாதிப்பு

டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதலாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து இரவு நேரங்களிலும், பகலில் அவ்வப்போதும் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா இளம் நெற்பயிர்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் மழை நீரில் மூழ்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BDxFFH
via

No comments