Breaking News

முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர் துரைமுருகன் நாளை ஆய்வு

கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறந்தது தொடர்பாக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் அதிருப்தி எழுந்ததை தொடர்ந்து, தமிழக நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் துரைமுருகன் பெரியாறு அணையில் நாளை (அக்.5) ஆய்வு செய்ய உள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து கடந்த அக்.29-ம் தேதி கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 2 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 514 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜன், இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர். அப்போது தமிழக அரசின் சார்பில் பெரியாறுஅணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BDxqKN
via

No comments