அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம்: பாஜகவினர் மன்னிப்பு கோர உத்தரவு

மதுரை: மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 3 பேரின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவினர் மன்னிப்பு கோர நீதிபதி உத்தரவிட்டார்.
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த குமார், பாலா, கோபிநாத், மற்றொரு கோபிநாத், ஜெயகர்ணா, முகமது யாகூப், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை என 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ABzg284
via
No comments