Breaking News

மழைக்கால களப் பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக 15 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: பருவமழை காலத்தில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிக்க மாநகர பகுதிக்குள் உள்ள 15 மண்டலங்களிலும் தலா ஒரு செயற்பொறியாளர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்ன குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை (நவ.1) முதல் 30-ம் தேதி வரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிப்பதற்காக, மண்டலத்துக்கு ஒரு செயற்பொறியாளர் வீதம், 15 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JIZRpzu
via

No comments