ஊரப்பாக்கம் அருகே குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதனப் பெட்டி வெடித்த விபத்தில், அறையில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். சிறுமி உட்பட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர், கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மனைவி கிரிஜா(63), மகள் பார்கவியுடன் துபாயில் வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ItLdvpE
via
No comments