Breaking News

38 சென்சார்கள், 68 சிசிடிவி கேமராக்கள்... - சென்னை வெள்ளத்தைக் கண்காணிக்க தயார் நிலையில் கட்டுப்பாட்டு அறை

சென்னை: சென்னையில் பல்வேறு பாதிப்புகளை கண்டறிய ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் :

கட்டுப்பாட்டு அறை : பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் பணிபுரிய சுழற்சி முறையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 4 அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் 3 அலுவலர்கள், 3 செயற்பொறியாளர்கள் மற்றும் 54 இதர நிலையிலான அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதர சேவைத் துறைகளான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறைகளின் அலுவலர்களும் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WGLY1bI
via

No comments