புதுச்சேரி | சாலை விபத்தில் தலையில் காயம் அடைந்த இளைஞருக்கு ஆளுநர் தமிழிசை முதலுதவி
புதுச்சேரி: சாலை விபத்தில் தலையில் காயம் அடைந்த இளைஞருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் காணப்பட்டார். அவருக்கு உடனே ஆளுநர் முதலுதவி அளித்து, காயங்களுக்கு கட்டுபோட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k87lSTQ
via
No comments