25 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.25 கோடி ஆதார மானிய நிதி: தொழில்முனைவோருக்கான கையேட்டையும் வெளியிட்டார் முதல்வர்
சென்னை: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேட்டை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், புத்தொழில் ஆதார மானிய நிதியை வழங்கியதுடன், தொழில் முனைவோர்களுக்கான ‘வழிகாட்டி மென்பொருள்’ இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணையில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YKE2Rp8
via
No comments