Breaking News

புதுச்சேரி | கால தாமதம், தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு - பாண்லே பால் விற்பனை நிறுத்தத்தால் முகவர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. பாண்லே பாலுக்கு புதுச்சேரி மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. பாண்லே முகவர்கள் மூலம் 80 சதவீத பால் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் வழக்கமாக வரும் நேரத்தை விட காலதாமதமாக பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பாண்லே முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏஐடியூசி பாண்லே முகவர்கள் அய்யங்குட்டிபாளையம் பாண்லே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IPYfRD
via

No comments