Breaking News

புதுச்சேரி | பள்ளிகளில் விரும்புவோருக்கு யோகா கற்றுத் தர நடவடிக்கை - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளில் விரும்புவோருக்கு யோகக்கலையை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் 28-வது சர்வதேச யோகா திருவிழா தொடக்க விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை செயலர் குமார் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். விழாவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘யோகக்கலை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தேசத்தில் இருந்தது என்று சரித்திரம் சொல்கிறது. மற்ற நாடுகளில் மனிதர்கள் நாகரீகம் என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் இந்தியாவில் யோகா பயிற்சி செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட பழமையான கலைதான் இந்த யோகக்கலை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LDEVxYZ
via

No comments