அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரியாத்: போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்முறை கால்பந்து வீரராக ஐரோப்பிய அணிகளில் இணையாமல், மத்திய கிழக்கு நாட்டின் கிளப் அணியில் ரொனால்டோ இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆச்சர்யத்தை போக்கும் வகையில், அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அல் நசர் கிளப்பில் இணைந்த ரொனால்டோ இதுதொடர்பாக பேசுகையில், "நான் ஒரு தனித்துவமான வீரர். இங்கு வந்துள்ளதை நல்லது என கருதுகிறேன். ஐரோப்பாவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளேன். மேலும் சில சாதனைகளை இங்கு முறியடிக்க விரும்புகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Hl8WOmF
No comments