Breaking News

உலகக் கோப்பை தொடருக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி: இந்திய அணியின் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கருத்து

கொழும்பு: ஜஸ்பிரீத் பும்ராவின் வருகையால் இந்திய அணியின் பந்து வீச்சு துறை வலுப்பெற்றுள்ளது என்றும் உலகக் கோப்பை தொடருக்கு முழு உடற்தகுதியுடன் உள்ள 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா காயத்தில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கினார். 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் களமிறங்கிய பும்ரா, முழு உத்வேகத்துடன் செயல்பட்டார். தொடர்ந்து தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gOaIqDx

No comments