Breaking News

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்த முதல்வர்: நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் சா.மு.நாசரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு திருமுல்லைவாயல், ஆவடி பகுதிகளில் நாஞ்சில் சம்பத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

வாக்கு என்பது ஆயுதத்தைக் காட்டிலும் வலிமையானது. தமிழகத்தில் காலூன்ற பாசிச கும்பல் துடிக்கிறது. மணிப்பூர், மேகாலயா, கோவா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களைப்போல தமிழகத்திலும் விளையாடலாம் எனக் கருதுகிறது. ஆனால், அவர்களது எண்ணம் பலிக்காது என்பதை வரும் சட்டப்பேரவைத் தேர்தல் நிரூபிக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wqCFMf
via

No comments