Breaking News

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குரல் பதிவு, டிஜிட்டல் திரையில் பிரச்சாரம்: சந்தைகள், பூங்காக்கள், குடியிருப்புகளில் வாகனங்களை நிறுத்தி வாக்கு சேகரிப்பு

கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இத்தேர்தல் பிரச்சாரத்தில் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குரல் பதிவும், டிஜிட்டல் திரைக்காட்சியும் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்.6) நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால், கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் இரண்டு தடவை தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்துவிடுவார்கள். இத்தேர்தலில் பலரும் அதுபோல பிரச்சாரம் செய்ய முடியவில்லை. குறைவான நாட்களும், தலைவர்கள் பிரச்சாரத்தின்போது அவர்களுடன் இருக்க நேரிட்டதாலும் ஒரேயொரு தடவைதான் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dtBaEE
via

No comments