Breaking News

அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் குழு மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை: தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

தமிழகத்தில் கரோனா தடுப்புப்பணிகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்புதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா வைரஸ்பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 தினங்களாக நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் என்றஅளவில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் கரோனா பரவலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றுமருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SgGrZ4
via

No comments