Breaking News

பட்டாசு வெடிக்கவோ, ஊர்வலம் செல்லவோ கூடாது; வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிப்பு: தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ நீதிபதிகள் அறிவுறுத்தல்

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசியல் கட்சியினர் வெற் றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பட்டாசு வெடிக்கக் கூடாது, ஊர்வலம் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா 2-வது அலை தீவிர மாக பரவி வரும் சூழலில் ரெம் டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், வெண்டிலேட்டருக்கு பற்றாக்குறை நிலவுவதாக ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல, கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரோனா விதி முறைகளுக்காக தேர்தல் ஆணை யம் குறித்து வழக்கு தொடர்ந் திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e5TKUx
via

No comments