வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி, திமுகமாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/331n7Be
via
No comments