பள்ளத்தில் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு: மலர் தூவி வனத்துறையினர் அஞ்சலி

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனித்தனியாகவும் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட புல் மலையில் ஊசிமலைவனச்சுற்றில் உள்ள மரப்பாலம் பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, பள்ளத்தில் விழுந்து குட்டியானை உயிரிழந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eJPSIa
via
No comments