Breaking News

தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விநியோகம் நிறுத்தம்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பு உள்ளது

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணைக்கு அரசு மருத்துவமனைகளை நாடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

45 வயதுக்கு மேற்பட்டவர்க ளுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், அங்கீகரிக்கப் பட்ட தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணப்படியும், கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள லாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், 'தனியார் மருத்துவமனைகள், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம். விநியோகத்தில் 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம்' என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், மாநில அரசு மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விநியோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vDsv9N
via

No comments