Breaking News

நீட் தேர்வு தொடர்பாக மக்களிடம் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் வரப்பெற்றன: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்

நீட் தேர்வு தொடர்பாக மக்களிடம் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்துஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த 14-ம் தேதிநடைபெற்றது. நீட் தேர்வு பாதிப்புகுறித்து மக்கள் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக கருத்து தெரிவிக்கலாம் என்றுகுழு கடந்த வாரம் அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gIszAy
via

No comments