Breaking News

கொள்முதல் மையங்களில் தேங்கி கிடக்கும் நெற்குவியல்கள்: விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

மதுராந்தகம் அருகே உள்ள கிளார்ஊராட்சி ஏரிவாக்கம் பகுதியில் உள்ளநெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல், குவியல் குவியலாக கடந்த இரு மாதத்துக்கும் மேலாக தேங்கிக் கிடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுராந்தகம் அருகே உள்ளது ஏரிவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்நேரடி நெல் கொள்முதல் மையம்தொடங்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் மையத்துக்கு, அருகாமையில் உள்ள கிராமங்களில் இருந்து அறுவடை செய்த நெல்லை, விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்த நெல் கொள்முதல் மையம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் மட்டும், நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பிறகு நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதற்கிடையில் வியாபாரிகளும் சிலர் இந்த நெல் கொள்முதல் மையத்துக்கு, நெல்லை கொண்டு வந்து இறக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் எப்போது தங்கள் நெல் கொள்முதல் செய்யப்படுமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xAw2Ha
via

No comments