Breaking News

பிஏபி திட்டத்தில் பாசனத்துக்கு நீர் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்: வருவாய்த்துறை அறிக்கை சமர்ப்பிக்க போலீஸார் உத்தரவு

பிஏபி திட்டத்தில் பாசனமில்லாத பகுதிகளுக்கு முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்லப்படுவது குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளோம் என திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக தேவையான அளவுதண்ணீர் கிடைப்பதில்லை என்றகுற்றச்சாட்டு நிலவுகிறது. நீர் மேலாண்மைத் திட்டத்தை முறையாககடைபிடிக்காததும், வணிக பயன்பாட்டில் உள்ள நிலங்களை மதிப்பிட்டு நீக்கம் செய்யப்படாததும் தான் இப்பிரச்சினைக்கு காரணம் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vZ72Jn
via

No comments