விளையாட்டாய் சில கதைகள்: பிரான்ஸில் வென்ற நவோத்னாவின் சிஷ்யை

பாரிஸ் நகரில் கடந்த வாரம் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், டென்னிஸ் உலகில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் செக் நாட்டு வீராங்கனையான பார்பரா கிரெஜிகோவா. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்பு டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 33-வது இடத்தில் இருந்த அவர், இப்போது முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
செக் நாட்டில் உள்ள இவான்சிஸ் நகரில் 1995-ம் ஆண்டில் பிறந்த கிரெஜிகோவா, டென்னிஸ் விளையாட்டில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம், முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான ஜானா நவோத்னா. தனது 18 வயது முதல் புற்றுநோயால் ஜானா நவோத்னா இறக்கும்வரை அவரிடம் பயிற்சி பெற்றுள்ளார் கிர்ஜிகோவா. அவரிடம் பெற்ற பயிற்சியால், ஆரம்பத்தில் பல இரட்டையர் பட்டங்களைப் பெற்றுள்ள கிரெஜிகோவா, இப்போது ஒற்றையர் பிரிவிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zKfZbs
No comments