Breaking News

சென்னை மியாட் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை

மியாட் மருத்துவமனையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளையும் கொண்ட வெகுசில தனியார் மருத்துவமனைகளில் சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையும் ஒன்றாகும். கரோனா 2-வது அலையில் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, மியாட் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மே 17-ம் தேதி மியாட் மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xiKYKm
via

No comments