Breaking News

மதுரையில் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர் தலைமறைவு?- நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு; தேடுதல் வேட்டையில் தனிப்படை

சிவகங்கை மாவட்டம் இளையான் குடியைச் சேர்ந்த கொங்கன் மகன் ஹர்ஷத்(33). இவர் மதுரை வில்லாபுரத்தில் பேக் கடை ஒன்றில்
3 ஆண்டாக டெய்லராக பணியாற்றினார். தனது முதலாளியின் உதவியோடு சொந்த ஊரில் பேக் கடை திறக்க ஏற்பாடு செய்தபோது அவரது முதலாளி ரூ.4 லட்சம் கடன் கொடுத்தார்.

மேலும் ரூ.5 லட்சம் தேவைப்பட்டதால் இத்தொகையை திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியிடம் ஹர்ஷத் கடன் கேட்டிருந்தார். இதற்காக, அவரை நாகமலை புதுக்கோட்டை மாவு மில் அருகே கடந்த 5-ம் தேதி சந்தித்தார். அப்போது, ஏற்கெனவே தனது உறவினர்களிடம் வாங்கியிருந்த ரூ.10 லட்சத்தையும் ஹர்ஷத் கையில் வைத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VkPqKa
via

No comments