தமுமுக பெயர் பலகை விவகாரத்தில் மண்ணடியில் 2 தரப்பினர் இடையே கடும் மோதல்: 3 போலீஸார் உட்பட 9 பேர் காயம்

தமுமுக பெயர் பலகை வைக்கப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டது குறித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1995-ம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) உருவாக்கப்பட்டது. சென்னை மண்ணடி வடமரைக்காயர் தெருவில் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. தமுமுகவின் தலைவராக இருந்த ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக இருந்த எஸ்.ஹைதர்அலி ஆகியோர் இரு கோஷ்டிகளாக செயல்பட ஆரம்பித்தனர். 2019-ம் ஆண்டில் இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டினர். தமுமுகவில் இருந்து ஜவாஹிருல்லாவை நீக்குவதாக எஸ்.ஹைதர்அலியும், எஸ்.ஹைதர்அலியை நீக்குவதாக ஜவாஹிருல்லாவும் அறிவித்தனர். இந்நிலையில், ஜவாஹிருல்லா தரப்பினர் நீதிமன்றம் சென்று, தமுமுக கொடியை எஸ்.ஹைதர்அலி பயன்படுத்த தடை உத்தரவு பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UL8P74
via
No comments