பறிமுதல் செய்த 2.20 லட்சம் வாகனம் விடுவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே10-ம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டன. விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 80 நாட்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Tv0yUx
via
No comments