Breaking News

2 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவு: விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

காஞ்சிபுரத்தில் 2 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவுற்றன. இதனால் ரயில்கள்செல்லும் நேரங்களில் வாகனங்கள் காத்திருக்கும் நிலையும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, பூந்தமல்லி, சுங்குவார்சத்திரம், பெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு, புதிய ரயில் நிலையம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் புதிய ரயில் நிலையம் வழியாக சென்னை செல்லும் சாலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iaPeGo
via

No comments