திரைப்படப் பயிற்சி நிறுவனம் உலக தரத்துக்கு மேம்படுத்தப்படும்: செய்தித் துறை அமைச்சர் உறுதி
தரமணியில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை, நேற்று மாலை அமைச்சர் சாமிநாதன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முன்காண் திரையரங்கம், மறு ஒலிப்பதிவு திரையரங்கம், குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம், மாணவர்கள் படப்பிடிப்புத் தளம், மாணவர் தங்கும் விடுதி, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் பிரிவு மற்றும் வளாகத்தில் அமைந்துள்ள ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், மறு ஒலிப்பதிவு திரையரங்கில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படத்தையும் பார்வையிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rHnpbW
via
No comments