பாரதியார் நினைவுநாளை முன்னிட்டு அரசு சார்பில் ஆண்டுதோறும் செப்.11-ம் தேதி ‘மகாகவி நாள்’ கடைபிடிக்கப்படும்: நூற்றாண்டை முன்னிட்டு 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்.11-ம் தேதி அரசு சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என்றுமுதல்வர் ஸ்டாலின் அறிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் 10-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை கோட்டை கொத்தளத்தில் நான், ஆக.15-ம் தேதி தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றும்போது, ‘இது மகாகவி பாரதியார் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு’ என்று குறிப்பிட்டேன். அவர் வரகவியா, மகாகவியா, தேசியகவியா என்று விவாதம் நடந்த காலத்தில், 1947-ம் ஆண்டே பாரதியாரை ‘மக்கள் கவி’ என்று எழுதவும், பேசவும் தொடங்கியவர் முன்னாள் முதல்வர் அண்ணா. ஒருபக்கம் நில பிரபுத்துவம், இன்னொரு பக்கம் சனாதனம், இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தை படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா எழுதினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3np5hUj
via
No comments