Breaking News

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 78,000 பேருக்கு கரோனா தடுப்பூசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்.12-ம் தேதி) நடத்தப்படும் சிறப்பு முகாம் மூலம் 78 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னணி மாவட்டங்களில் ஒன்றாகப் புதுக்கோட்டை உள்ளது. அதன்படி, தமிழகத்திலேயே முதல் முதலாக மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YHGnVr
via

No comments