Breaking News

நீதிமன்ற பணியாளர் நியமனம் குறித்து யாரும் அணுக வேண்டாம்: வீட்டில் அறிவிப்பு ஒட்டிய அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தன்னிடம் பரிந்துரை கடிதம் கோரி யாரும் வரவேண்டாம் என புதுக்கோட்டையில் உள்ள மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவுப் பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, மசால்ஜி போன்ற பணியிடங்களுக்கு 3,557 பேரை தேர்வு செய்வதற்கு கடந்த மாதம் தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yFCpJi
via

No comments