Breaking News

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் தீவிர ஆய்வு: குறைபாடு இருந்தால் உரிமம் ரத்து

பள்ளி, கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கடந்த ஒரு வாரமாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் (ஆர்டிஓ) மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o8epwX
via

No comments