வயது வரம்பு கட்டுப்பாடு எதிரொலி; ‘டெட்’ தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் பணிக்கு செல்லமுடியாது: 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகளுக்கு அடுத்த அதிர்ச்சி
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. குறிப்பிட்ட கல்வித் தகுதி இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதி, அரசுப் பள்ளியில் ஆசிரியராக சேரலாம்.
இந்நிலையில், கடந்த அதிமுகஆட்சியில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதன்முதலாக வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. பொதுப் பிரிவினருக்கு 40, எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பி.சி. (முஸ்லிம்), எம்.பி.சி. பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 45 என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mI6TpX
via
No comments