Breaking News

தமிழகத்தில் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்; அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு: 4 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் விளக்கம்

தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மின்னுற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நிலக்கரி விநியோகம் குறைந்துள்ளது. தமிழகத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரி மூலம் அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே மின்னுற்பத்தி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oXfO9R
via

No comments