Breaking News

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; 39 ஒன்றியங்களில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZKaDPY
via

No comments