Breaking News

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்; அமைதியாக நடந்த வாக்குப்பதிவு: 74.37% வாக்குகள் பதிவாகின; 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்தது. இதில் 74.37 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு அக். 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி களுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AjbHqD
via

No comments