ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் நியமனம்
ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் ரவியும், உறுப்பினர்களில் ஒருவராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆரோவில் சர்வதேச நகரின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. கரண்சிங் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியது. ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழக ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uY2xyK
via
No comments