Breaking News

பஞ்சாப்புக்கு எண்ட் கார்டு! மும்பைக்கு பிரஷர் கார்டு! ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!

நடப்பு ஐபிஎல் சீசனின் 54-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 171 ரன்களை எடுத்தது. அந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டியது. 

image

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் லிவிங்ஸ்டன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் யாஷஸ்வி, இரண்டாவது ஓவரில் சஞ்சு சாம்சன், நான்காவது ஓவரில் லிவிங்ஸ்டன் மற்றும் அனுஜ் ராவத் என பவர் பிளே ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான். ஆறு ஓவர்களில் வெறும் 17 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் எடுத்திருந்தது. ராஜஸ்தான் பவர் பிளே ஓவர்களில் எடுத்துள்ள இரண்டாவது குறைந்தபட்ச ரன்கள் இது. 

தொடர்ந்து எட்டாவது ஓவரில் பிலிப்ஸ் மற்றும் ஷிவம் தூபே, ஒன்பதாவது ஓவரில் மோரிஸ், பன்னிரண்டாவது ஓவரில் உனட்கட், பதினாறாவது ஓவரில் சக்காரியா, பதினேழாவது ஓவரில் தெவாட்டியா என 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் தோல்வியை தழுவியது. 

image

கொல்கத்தா அணிக்காக ஷிவம் மாவி (4), ஃபெர்குசன் (3), ஷகிப் அல் ஹசன் (1), வருண் சக்கரவர்த்தி (1) மாதிரியான பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கொல்கத்தா நெருங்கியுள்ளது. மும்பை அணி, ஹைதராபாத் அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 200 ரன்களுக்கு மேல் எடுத்து, 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அந்த அணியால் தகுதி பெற முடியும். மும்பை (-0.001) மற்றும் கொல்கத்தா (+0.587) அணிகளுக்கு இடையே உள்ள ரன் ரேட் வித்தியாசம் தான் மும்பை இந்த பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. மறுபக்கம் பஞ்சாப், ராஜஸ்தான் என இரண்டு அணிகளும் கொல்கத்தாவின் இந்த வெற்றியினால் முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளன. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iIzKtj
via

No comments