Breaking News

கைத்தறி ஆடைகள், பட்டு சேலைகள் விற்பனையை ஊக்கப்படுத்த தீபாவளிக்கு தள்ளுபடிகளை அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தல்

தீபாவளி உட்பட அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வருவதால், பட்டு கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி ஆடைகள் மற்றும் பட்டுச்சேலை விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கான தள்ளுபடி அறிவிப்புகளை, தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகள் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், உயர்வான கூலியை கருத்தில் கொண்டு பட்டு வேட்டிகள் மற்றும் முகூர்த்த பட்டுச்சேலை தயாரிப்பில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். விலை அதிகமான பட்டுச்சேலைகளை பொதுமக்கள் அதிகம் விரும்புவதில்லை. ஏனென்றால், முகூர்த்த பட்டுச்சேலையாக ஒன்று மட்டுமே வாங்குகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mm3Vaz
via

No comments