Breaking News

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்; 30 ஆம் தேதி உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை (நவ.29) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவிருந்த நிலையில் அது நாளைக்குப் பதில் நாளை மறுநாள் (நவ.30) ஆம் தேதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xyYoCW
via

No comments