Breaking News

திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 28 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

சென்னை: திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) சார்பில் கட்டப்பட்டிருந்த பழமையான குடியிருப்பில் 28 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன. அங்கு வசித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால் அதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அடுத்த திருவொற்றியூர் கிராமத் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த 1993-ம் ஆண்டு 360 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தொடங்கியது. செம்மொழி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் குடிசைகளில் வசித்து வந்தவர்களுக்கு இந்த குடியிருப்பில் 1998-ம் ஆண்டு வாக்கில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mAloNi
via

No comments