Breaking News

‘சக்தி வாய்ந்த முதல்வர் ஸ்டாலின்’ - ஆளுநர் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவிபட்டங்களை வழங்கினார். நடப்பாண்டில் 12,814 மாணவர்கள் பட்டப் படிப்புகளை முடித்துள்ளனர். அவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள். சிறப்பிடம் பெற்ற 129 மாணவர்களுக்கு விழாவில் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ‘சக்தி வாய்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே’.. எனத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: கரோனா காலத்தில் ஆராய்ச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பங்கு அளப்பரியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/327aIix
via

No comments