Breaking News

வருவாய்க்கு அதிக சொத்து சேர்த்த புகார்: தனித்துணை ஆட்சியர் வீடு, பள்ளி, பங்க்கில் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வருவாய் நீதிமன்றத்தில் தனித்துணை ஆட்சியராக பணிபுரிபவர் பவானி. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, திருவானைக்காவலில் உள்ள பவானியின் வீடு, பவானியை நிர்வாக உறுப்பினராகக் கொண்டு மண்ணச்சநல்லூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி, பவானியின் மகன் ஹர்ஷவர்தன் வாளாடியில் நடத்தி வரும் பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZEVxf0
via

No comments