Breaking News

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது: இடஒதுக்கீட்டு விவரம் பிப்.15-ம் தேதி வெளியாகிறது

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம்27-ம் தேதி தொடங்கியது. சென்னைஅண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேரும், தொடர்ந்து அரசு பள்ளிமாணவர்களுக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேரும் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/63oCSfBvs
via

No comments