பணிநிரந்தரம் செய்யக் கோரி 2-வது நாளாக பகுதி நேர சிறப்பு ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்: டிபிஐ வளாகத்திலேயே தரையில் படுத்து உறங்கினர்
சென்னை: பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அதில் பங்கேற்ற பலர் முதல் இரவு அந்த வளாகத்திலேயே தரையில் படுத்து உறங்கினர்.
தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tRxFfVq
via
No comments