Breaking News

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 21 மாநகராட்சி களையும் திமுக கைப்பற்றியது. அத்துடன் 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளையும் திமுக தன் வசமாக்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EftNz7m
via

No comments